ரோட்டை கடக்கும் போது பைக் மோதி காவலாளி பரிதாப பலி..

கோவை :மதுரையைச் சேர்ந்தவர் பாண்டியன் ( வயது 63) இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ரோட்டை கடந்தார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் பாண்டியன் படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மனைவி செல்வராணி செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பைக் ஓட்டி வந்த திருச்சூர், மாம்பறையைச் சேர்ந்த சாயிஸ் (வயது 21 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.