கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம்..!

கோவை: ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 72) இவர் அந்த பகுதியில் 2015 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த 12ஆம் தேதி சிறையில் திடீர் காய்ச்சல் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு இறந்தார் .இது குறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.