இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது…

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவரை அவரது உறவினர் ஒருவர் காதலித்து வந்தாராம்.கடந்த ஏப்ரல் மாதம் 10 -ந் தேதி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .பின்னர் அவரிடம் பல தடவை உடலுறவு வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். கடந்த 12ஆம் தேதி அந்த பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவல் அரசு மருத்துவமனையில் இருந்து துடியலூர் காவல்அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது, இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் அந்த பெண்ணிடம்விசாரணை நடத்தி பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜ் ( வயது 28) என்பவரை கைது செய்தார் இவர்மீது போக்சோசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.