8-ம் வகுப்பு மாணவி திடீர் மரணம்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் கணேசன், இவரது மனைவி கோமதி ( வயது 37) இவர்கள் கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் வீதியில் வசித்து வருகிறார்கள்.கோமதி வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இந்து பிரியா ( வயது 12) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்து பிரியாவுக்கு நேற்று திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. பிறகு அவர் வாந்தி எடுத்தார் .இந்த நிலையில் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் இந்து பிரியா இறந்தார் .இது குறித்து அவரது தாயார் கோமதி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.