பைக் மீது கார் மோதி விபத்து: மனைவி கண் முன்னே கணவர் பலி..!

கோவை பக்கம் உள்ள கிணத்துக்கடவு பொன்மலை நகரை சேர்ந்தவர் நடராஜ் ( வயது 54) விவசாயி .இவரது மனைவி செல்வநாயகம் ( வயது 48) நேற்று நடராஜ் தனது மனைவியுடன் கோயிலுக்கு செல்வதற்காக கோவை – பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது .இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்,நடராஜ் அதே இடத்தில் பலியானார். மனைவி செல்வநாயகம் படுகாயத்துடன் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த கிஷோர் (வயது 19)என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.