போதைப் பொருள் விற்பனையை மறைக்கும் கல்வி நிா்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை..!

கோவை:
போதைப் பொருள்கள் விற்பனை, பயன்பாடு குறித்து தெரிந்தும் போலீசாருக்கு
தகவல் தெரிவிக்காத கல்வி நிலைய நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
என்று மாநகர போலீசாா் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக கல்வி நிலையங்கள்
அருகே போதைப் பொருள்கள் விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி, பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள்
விற்பனை மற்றும் மாணவா்களிடையே போதைப் பொருள் பழக்கம் குறித்து
விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் உடையாம்பாளையத்தைச் சோ்ந்த 2 பேர் பீளமேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தின் பின்புறம் நின்றுகொண்டு அண்மையில் புகைப் பிடித்துள்ளனா்.
குற்ற நடவடிக்கை இது தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கும் அவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து
வருகிறது. இனி வரும் காலங்களில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதைச்
சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து தகவல்கள்
தெரியவரும்போது அதை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
இதனை தலைமை ஆசிரியா் அல்லது பள்ளி, கல்லூரி முதல்வா் ஆகியோா் மறைப்பதன்
மூலம் போதைப் பொருள்கள் விற்பனைக்கு உடந்தையாகச் செயல்படுவதாக
கருதப்பட்டு அவா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.