பைக் வாங்கி கொடுக்காததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை..

கோவையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம்,பகத்சிங் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ்.இவரது மகன் சூர்யா (வயது 19)குடிபழக்கம் உடையவர்.எந்த வேலைக்கும் சரிவர செல்வதில்லை.இந்த நிலையில் தனது தாயிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கூறினாராம்.அதற்கு அவர் மறுத்தார்..இதனால் மனம் உடைந்த சூர்யா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.