சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு – பைக் ஆசாமி கைவரிசை..!

கோவை அருகே உள்ள வெங்கிட்டாபுரம், அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜராஜன். இவரது மனைவி திவ்யலட்சுமி (வயது 33)தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சாய்பாபா காலனி அவினாசி லிங்கம் கல்லூரி ரோட்டில் நடந்து சென்றார் .அங்குள்ள பாரதி பார்க் அருகே சென்ற போது அந்த வழியாக பைக்கில் பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார. இது குறித்து திவ்யலட்சுமி ,சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்..