170 பயணிகளுடன் கோவையில் தரையிறங்கிய சார்ஜா-கோழிக்கோடு விமானம்..!

கேரளாவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை சுமார் 4 மணி அளவில் சார்ஜாவில் இருந்து கோழிக்கோடு செல்ல வேண்டிய ஏர் அரேபியா விமானம் அங்கு தட்ப வெப்ப நிலை சரியில்லாத காரணத்தால் தரையிறங்க முடியாமல் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர். .இந்த பயணிகள் அனைவரும் விமானத்தின் உள்ளே இருக்க வைக்கப்பட்டனர். அங்கு தட்ப வெட்ப நிலை சரியானதும் இன்று காலை 9 . 20 மணிக்கு அந்த விமானம் கோழிகோடு புறப்பட்டு சென்றது..