நடத்தையில் சந்தேகம்… மனைவியை தாக்கி கொலை மிரட்டல் – கணவருக்கு வலை..!

கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம், தண்ணீர் பந்தல் வீதியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (வயது 28)இவரது மனைவி ஜோதி ( வயது 22) இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி ஆர். எஸ். புரத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வருகிறார்.கணவர் மகாவிஷ்ணு குடிப்பழக்கம் உடையவர். எந்த வேலைக்கும் செல்வதில்லை இவர் மனைவி நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மகா விஷ்ணு அவரது மனைவியை தாக்கி,கீழே பிடித்து தள்ளினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .இது குறித்து ஜோதி வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவர் மகாவிஷ்ணு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..