ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து காவலாளி பலி..

கோவை மாவட்டம் ,காரமடை காந்திநகர் பக்கம் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் சங்கரன் ( வயது 60) காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று காரமடை – மேட்டுப்பாளையம் ரோட்டில் தனியார் பஸ்சில் பயணம் செய்தார்.அங்குள்ள ஒரு வளைவில் பஸ் திரும்பும்போது, ஒடும் பஸ்சிலிருந்து கீழே தவறி விழுந்தார் .இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தனியார் பஸ் டிரைவர் நவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.