3 தடவை திருமணம் முடிந்ததை மறைத்து 4வது திருமணம்- கணவர், மாமியார் உட்பட 3 பேர் மீது பெண் பரபரப்பு புகார்..!

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர், மணியம் காளியப்பா வீதியை சேர்ந்தவர் காந்தி பிரதாபன் .இவரது மகள் மதுமிதா (வயது 36)இவரது கணவர் பெயர் லஜபதி,இவர் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து பெறாமல் மதுமிதாவை 4-வது திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் லஜபதி தனது மனைவி மதுமிதாவிடம் பெற்றோர் வீட்டில் நகை பணம் வாங்கி வருமாறு கூறி டார்ச்சர் செய்தாராம். இதற்கு மாமியார் சாந்தினி தேவி,கணவரின் தங்கை சுகாசினி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது .இது குறித்து மதுமிதாவின் தந்தை காந்தி பிரதாபன் கோவை மத்திய பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார் ,போலீசார் கணவர் லஜபதி ,மாமியார் சாந்தினி தேவி கணவரின் தங்கை சுகாசினி ஆகியோர் மீது மோசடி, வரதட்சணை கொடுமை உட்பட 4 பிரிவினில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.