லாரியில் ரகசிய அறை அமைத்து புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கடத்தல்….

லாரியில் ரகசிய அறை அமைத்து புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கடத்தல்….

கேரளா மாநிலம், மலப்புரத்தில் இருந்து சென்னை சென்ற மினி லாரியை கோவை போத்தனூர் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்ற போது லாரி நிற்காமல் சென்றது. இதைத் தொடர்ந்து அந்த லாரியை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற காவல் துறையினர் சிறிது தூரம் சென்று மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து லாரி ஓட்டுநர் மனோஜிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்க கலக்கத்தில் இருந்ததால் நீங்கள் லாரியை நிறுத்தியது தெரியவில்லை என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். மேலும் அந்த லாரியில் விறகு கட்டைகள் இருப்பதாக கூறி உள்ளார். சந்தேகம் அடைந்த காவல் துறையினர் பின்னர் அந்த லாரியில் சோதனை செய்தனர். அதில் ரகசிய அறை அமைத்து சந்தன கட்டைகள் மறைத்து வைத்து கடத்திச் சென்றது கண்டுபிடித்தனர். பின்னர் இது குறித்து வனத் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து லாரியை பறிமுதல் செய்த வனத்துறையினர். அதனை பறிமுதல் செய்த வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில்  கொண்டு சென்று சோதனை செய்ததில் ஒரு டன் சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து, மேலும் ஓட்டுநர் மனோஜ்யிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.