போதைப் பொருள் விற்பனை செய்தவர்களின் ரூ.18 கோடி சொத்துகள் முடக்கம் – காவல்துறை பேட்டி.!!

சென்னை: போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கூட்டாக செய்தியாளர் சந்தித்து பேசினர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்தமாட்டோம் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 2 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளோம் என்று கூறியுள்ளனர்.