கோவையில் 2 பேர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை வெரைட்டி ஹால் ரோடு, தாச கவுண்டர் வீதியை சேர்ந்தவர் நாக செல்வம் (வயது 36) நகை தொழிலாளி.இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் நீரழிவு ரத்த அழுத்தம் நோயால் அவதிப்பட்டு வந்தார் .இதற்கு மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த நாக செல்வம் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது அண்ணன் பாஸ்கரன் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல கோவை சிங்காநல்லூர் நீலி கோலம்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 48 )இவர் குடிப்பழக்கம் உடையவர். குடிபோதையில் நேற்று அவரது வீட்டில் படுக்கை அறை மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..