முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்… தாசில்தார், டிஎஸ்பி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுக்கள்.!!

முதுகுளத்தூரில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகளையும் அகற்ற கோரி பொது மக்களுக்கும் ,வியாபாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர் சில நாட்களுக்கு முன்பாக கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி தலைமையில் டி.எஸ்.பி. சின்னு பாண்டி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் இனிமேல் நெடுஞ்சாலை பகுதியை ஆக்கிரமித்தால் கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இந்த நடவடிக்கையால் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர் .