பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் “இமைகள் திட்டம்” ..!

 திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., நேற்று   இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வாணியம்பாடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி மற்றும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆய்வாளர்கள் மற்றும் சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர்..