ராமநாதபுரத்தில் ஆக 26-ம் தேதி போலீஸ் வேலை எழுத்து தேர்வு- எஸ்.பி தங்கதுரை அறிவிப்பு.!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான காவல் துறை சார்பு ஆய்வாளர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணிக்கு 6,230 (ஆண் மற்றும் பெண்) 6 மையங்களில் ஆக.26. காலை 10 மணி முதல் மதியம் 12:30 வரை எழுத்து தேர்வு, மாலை 3:30 மணி முதல் 5:10 மணி வரை தமிழ் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. எனவே
பரமக்குடி கே ஜே எம் மேல்நிலைப் பள்ளி, ஆயிர வைஸ்யா மேல்நிலைப் பள்ளி, வாணி வேலுமாணிக்கம் மாண்டிசோரி மேல்நிலைப் பள்ளி,
செய்யது அம்மாள் அறிவியல் மற்றும் கலை கல்லூரி,செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் 6,230 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அழைப்புக்கடிதத்துடன் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு வரவேண்டும். அழைப்பு கடிதத்தில் புகைப்படம் இல்லாமலோ அல்லது தெளிவாக இல்லாமலோ இருந்தால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி வரவேண்டும். சான்று (ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது மற்றும் பிற) கொண்டு வரவேண்டும்.
அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் கையொப்பம் பெற்று கொண்டு புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள சான்று கொண்டு வர வேண்டும். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர் காலை 8:30 மணி முதல் 9:30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு ஆஜராக வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தாமதமாக வரும் விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார். தேர்வு மையத்திற்கு செல்போன், ஸ்மார்ட் வாட்ச், புளுடூத் சாதனங்கள், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டுவர கண்டிப்பாக அனுமதி இல்லை. விண்ணப்பதாரர் தேர்வுக்கு வரும்பொழுது, அழைப்புக்கடிதம், அடையாள அட்டை மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா தவிர வேறு ஏதும் எடுத்து வர அனுமதியில்லை என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்..