பைக் மீது போர்வெல் லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி – ஒருவர் படுகாயம்..

கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள கள்ளபாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ், அவரது மகன் திவாகர் ( வயது 19)குனியமுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார் . இவர் நேற்று இடையர்பாளையம்- கள்ளபாளையம் ரோட்டில் அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவர் தினகரன் ( வயது 19) என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த போர்வெல் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் பைக் ஓட்டிச் சென்ற திவாகர்,பின்னால் இருந்த தினகரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் திவாகர் இறந்தார். பின்னால் இருந்த தினகரன் சிங்காநல்லூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை நடத்தினார். இது தொடர்பாக போர்வெல் லாரி ஒட்டி வந்த சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுந்தர்ராஜ் (வயது 59) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.