கல்லூரி மாணவரை மிரட்டி செல்போன் பறித்த கொள்ளையன் கைது..!

கோவை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம். தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் .இவரது மகன் ராகுல் சரத் (வயது 21) கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் நவ இந்தியா பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரை மிரட்டி இவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இது குறித்து ராகுல் சரத் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்கு பதிவு செய்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எஸ். ஓ. . நகரை சேர்ந்த குரு என்ற குரு தேவன் ( வயது 23) என்பவரை நேற்று இரவு கைது செய்தார். செல்போன் மீட்கப்பட்டது.மேலும் விசாரணை நடந்து வருகிறது.