கோவை லாட்ஜில் அரசு மருத்துவமனை முதுநிலை பயிற்சி டாக்டர் விஷம் குடித்து தற்கொலை..

கோவை. ஆக 19 ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆதித்யா நகரை சேர்ந்தவர் விஸ்வேஷ்வரராவ். இவரது மகன் பிரவீன் அன்ன தாதா ( வயது 33)இவர் ஜாம்ஷெட்பூரில் எம்,பி,பி,எஸ். படித்தார். இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை நரம்பியல் மருத்துவம் 2 -ம் ஆண்டு படித்து வந்தார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் கோவை அரசு கலைக் கல்லூரி ரோடு கோபாலபுரத்தில் உள்ள உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அரை எடுத்து தங்கி இருந்தார். அவர் கடந்த ஒரு வாரமாக மருத்துவக் கல்லூரிக்கு செல்லவில்லை. தனது செல்போனையும் எடுத்துப் பேசவில்லை .இதற்கு இடையில் பிரவீன் அன்ன தாதரவின் பெற்றோர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது .இதனால் சந்தேகம் அடைந்த பிரவீன் அன்னதாதாவின் தந்தை விஸ்வேஸ்வரராவ் நேற்று கோவை வந்தார். அவர் கோவையில் மகன் தங்கி இருந்த லாட்ஜ்க்கு சென்று அறையை திறந்து பார்த்த போது பிரவீன் அன்னதாதா விஷம் குடித்து பிணமாக கிடந்தார்.மேலும் அவரது கழுத்தில் கேபிள் ஒயரால் இறுக்கிய தடையமும் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சிஅடைந்த அவர் கதறி அழுதார். இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிரவீன் அன்ன தாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்’. இதுகுறித்து முதுநிலை பயிற்சி டாக்டரின் தந்தை விஸ்வேஷ்வரராவ் போலீசாரிடம் கூறுகையில் பிரவீன் அன்னதாதா தேர்வு எழுத மருத்துவ துறையின் சான்றிதழ் கிடைக்க தாமதம் ஆவதாக 2 நாட்களுக்கு முன் தன்னிடம் கூறினார். இது பற்றி போலீசார் விசாரித்த போது பிரவீன் அன்னதாதா படித்த ஜாம்ஷெட்பூர் மருத்துவ கல்லூரியிலிருந்து எம்.ஜி.ஆர் .மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சான்றிதழ் வர தாமதமானதால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்காலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்றும் விசாரித்து வருகிறார்கள். இது குறித்து மருத்துவக் கல்லூரி டாக்டர் .நிர்மலா கூறியதாவது:- பிரவீன் அன்னதாதா கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு வரவில்லை. இதனால் அவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம். என்றார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதுநிலை பயிற்சி டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.