10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..!

கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி .இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் திருச்சி மாவட்டம் ,தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பரத் ( வயது 20) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 10 – ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது .அது நாளடைவில் காதலாக மாறியது .இதையடுத்து அந்த வாலிபர் மாணவியிடம் ஆசைவாரத்தை கூறி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே மாணவியின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறினர் .இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து கேட்டனர். அப்போது அவர் பரத் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து கூறினார். இது குறித்து மாணவியின் பெற்ற துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணயில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.