கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள சொலவம் பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சரஸ்வதி ( வயது 60) இவர் நேற்று வெங்கிட்டாபுரத்திலிருந்து டவுன்ஹாலுக்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்.பஸ் டவுன்ஹால் சென்றடைந்ததும் பஸ்சை விட்டு இறங்கி கழுத்தில் கிடந்த செயினை பார்த்தார் .அதை காணவில்லை .3 பவுன் செயினை யாரோ பஸ்சினுள் திருடிவிட்டார்கள்.இதுகுறித்து சரஸ்வதி உக்கடம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஸ்சில் மூதாட்டியின் 3 பவுன் தங்க செயின் திருட்டு..
![](https://www.newsexpresstamil.com/wp-content/uploads/2022/08/201903171637176582_two-woman-jewellery-theft-in-aruppukottai_SECVPF.jpg)
Leave a Reply