பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையம் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரபேட்டையில் உள்ள பொட்டு மேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு நாட்டுக்கல்பாளையத்தைச் சேர்ந்த சக்தி நாராயணனுக்கு சொந்தமான நிலத்தை சுத்தம் செய்ய அவரது டிரைவர் கலை பிரபு சென்றார். அவர் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணைக் கொட்டிய போது குடியிருப்புகளில் வழித்தடத்தை மறைத்து கொட்டியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட பகுதி பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தினர் .உடனே அவருடன் கலைப்பிரபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .அப்போது சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது..இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது .இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு விட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்..