“எனக்கு இன்னொரு முகம் இருக்கு” போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய நூல் வெளியீட்டு விழா கோவையில் நடந்தது-வீடியோ இணைப்பு.!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய “எனக்கு இன்னொரு முகம் இருக்கு” என்ற நூலும், அவரது மனைவி சுவேதா, மகன் அத்ருத் ஆகியோர் இணைந்து எழுதிய ” பேசி னேட்டிங் பிளாக்ஸ் பார் பன்”என்ற நூல் வெளியீட்டு விழாவும் நேற்று மாலை ஆர். எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள இன்டியன் மெடிக்கல் அசோசியேஷன் கட்டிடத்தில் நடந்தது.

கோவை பாரதிய வித்ய பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டு 2 நூல்களையும் வெளியிட்டார் .முதல் நூலை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குனர் எம். கிருஷ்ணனும்,  2 -வது நூலை எஸ்.எஸ.வி.எம். கல்வி நிறுவனர் ஸ்ரீஷா மோகன்தாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ‘துணை கமிஷனர் சந்தீப் ,சண்முகம் மதிவாணன் ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிஞர் கவிதாசன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனின் தந்தை வேலையா, தாயார் தங்க தனபதி, மனைவி சுவேதாவின் தாயார் சாந்தி சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் விஜயா புத்தக பதிப்பாளர் வேலாயுதம் நன்றி கூறினார்..