பொங்கல் வைத்தபோதுதேனீக்கள் கொட்டி 34 பேர்காயம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரத்தில் கிராம மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தில்ஒன்று கூடி பொங்கலிட்டு முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி நேற்று 100க்கும் மேற்பட்ட நபர்கள் அப்பகுதியில் பொங்கல் வைத்துள்ளனர். இவர்கள் பொங்கல் வைக்க பயன்படுத்திய தீயில் வந்த புகை அங்கு மர கிளையில் இருந்த தேனீக்கள் கட்டிய கூட்டில் பட்டதால் தேனீக்கள் கலைந்தது. இதனால் தேனீக்கள் அங்கிருந்தவர்களை விரட்டி,விரட்டி கொட்டியது இதில் 4குழந்தைகள் உட்பட 34 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த சம்பவம் வந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.