திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் மேயர் தொடங்கி வைத்தனர்.!!

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா். போலியோ சொட்டு மருந்து முகாமை திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று தொடங்கி வைத்த அவா் பேசியபோது அரசின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், அனைத்து ஊரக மற்றும் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் போலியோ நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அண்டை நாடுகளில் போலியோ நோயின் தாக்கம் இருப்பதால் தொடா்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பெற்றோா்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவா்களுக்கு 63 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ரயில்வே நிா்வாகத்துடன் இணைந்து திருச்சியில் அனைத்து ரயில்களிலும் மாா்ச் 3 முதல் 5 ஆம் தேதி வரை பயணிக்கும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் கிராமப்புறங்களில் 1,26,969, நகா்ப்புறங்களில் 66,994, இடம் விட்டு இடம் பெயா்ந்துள்ள 91 மற்றும் அகதிகள் முகாமில் உள்ள 81ஆக மொத்தம்; 1,93,963 குழந்தைகளுக்கு 1,695 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட 100% மேலாக சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது இதற்கு மனப்பாறை அருகே உள்ள வீரப்பூர் சமயபுரம் கம்பரசம்பேட்டை ஆகிய ஊர்களில் நடைபெற்ற திருவிழாக்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன என்றார். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் சுப்பிரமணியன் சுகாதாரத் துறை அலுவலர்கள் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் ஐந்து வார்டு 27 தென்னூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் தில்லை நகர் மக்கள் மன்றம் ஆகியவற்றில் நடந்த முகாம்களில் மாநகராட்சி மேயர் மு அன்பழகன் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன் நகர் நலவாளர் மணிவண்ணன் உதவி ஆணையர் வெங்கட்ராமன் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மாமனார் உறுப்பினர்கள் கமல் பாஷா விஜயலட்சுமி மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்