கோவையில் குற்ற தடுப்பு-சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டம் – கூடுதல் டி.ஜி.பி. சங்கர் பங்கேற்பு..!

கோவை: தமிழ்நாடு காவல்துறை சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி .ஆக பணிபுரிந்து வருபவர் கே. சங்கர் . இவர் நேற்று மாலை கோவை வந்தார். போலீஸ் விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இரவில் விடிய விடிய கோவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ரோந்து சுற்றி வந்தார்.காவல் நிலையங்களிலும் ஆய்வு செய்தார்.அவருடன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை கமிஷனர்கள் சென்றனர்..இன்று காலை 10 மணிக்கு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் சட்டம் ஒழுங்கு,குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் கூடுதல் டிஜிபி சங்கர் பேசினார்.கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் டி.ஐ.ஜி. விஜயகுமார் போலீஸ் சூப்பிரண்டுகள் பத்ரி நாராயணன் ( கோவை மாவட்டம்) சசி மோகன் (ஈரோடு மாவட்டம்)துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ், சுகாசினி,மதிவாணன் மற்றும் அனைத்து உதவி போலீஸ் கமிஷனர்கள் டி.எஸ்.பி.க்கள் பங்கேற்றனர்.