தடுப் பு கம்பியில் பைக் மோதி வாலிபர் சாவு…

பொள்ளாச்சியில் உள்ள கிருஷ்ணசாமிலே – அவுட்டை சேர்ந்தவர் கணபதி இவரது மகன் லெனின் (வயது 23) இவர் நேற்று கோவை -பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள நஞ்சை கவுண்டன் புதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது திடீரென்று நிலைதடுமாறி பைக் ரோடு ஓரத்தில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது .இதில் பைக்கில் இருந்து விழுந்து லெனின் படுகாயம் அடைந்தார். அவரைசிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.. வழியில் அவர் இறந்தார் .இது குறித்து வடக்கி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.