கோவை கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை 4மாணவர்கள் கைது.

கோவை அருகே உள்ள கோவை புதூர் குற்றால நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் சங்கர் தனுஷ் (வயது 20) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் இவர் நேற்றுசரவணம்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றார் .அப்போது அங்குள்ள நமச்சிவாய நகரில்மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த 4 பேர் இவரை வழிமறித்து தகராறு செய்தனர் .கத்திய காட்டி மிரட்டி இவரிடமிருநத லேப்டாப் மற்றும் பைக் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சங்கர் தனுஷ் சரவணம் பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் ஓமலூர் பெரியம்பட்டியைச் சேர்ந்த தனுஷ் (வயது 19) தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியை சேர்ந்த அர்ஷத் (வயது 19 )சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த ராம்குமார் ( வயது 23) தூத்துக்குடியை சேர்ந்த கால்வின் (வயது 22 )ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கோவையில் உள்ளவெவ்வேறு கல்லூரியில் படித்து வருகிறார்கள்..இவர்களிடமிருந்து லேப்டாப், பைக் பறிமுதல்செய்யப்பட்டது .இவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்யப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.