பிளஸ் 1 மாணவனை காதலித்து கோவைக்கு கடத்தி வந்த ஆசிரியை கைது….

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹெப்சிபா (வயது 28) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில்ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார் .இவருக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவனுடன் காதல் ஏற்பட்டது..அந்த மாணவனுடன் நெருங்கி பழகினார்.தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அந்த மாணவரிடம் உல்லாசமாக இருந்து உள்ளார். விடுமுறை நாட்களில் அந்த மாணவனை அழைத்துக் கொண்டு வெளியூர் சுற்றி வந்துள்ளார்.இந்த நிலையில் ஆசிரியை ஹெப்சிபா அந்த  மாணவருடன் திடீரென்று மாயமானார். மாணவனை பெற்றோர்கள் மகனை தீவிரமாக தேடினார்கள். கிடைக்காததால் சென்னை பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடி வந்தனர். ஆசிரியை மாணவனின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஆசிரியை ஹெப்சிபா மாணவனுடன் தங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்..ஆசிரியை ஹெப்சி பாவை கைது செய்தனர்.இருவரையும்,சென்னைக்கு அழைத்துச் சென்றனர் பின்னர் மாணவனுக்கு போலீசார் அறிவுரை கூறிபெற்றோரிடம் ஒப்படைத்தனர்.ஆசிரியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாணவனை காதல் வலையில் வீசி சென்னையிலிருந்து காரமடைக்கு கடத்தி வந்த ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.