பைக்- ஸ்கூட்டர் மோதல். வாலிபர் சாவு…

பைக்- ஸ்கூட்டர் மோதல். வாலிபர் சாவு. கோவை டிச 15கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகன் கார்த்திகேயன் (வயது 21) இவர் நேற்று சூலூர்- கலங்கல் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த ஒரு ஸ்கூட்டர் இவரது பைக் மீது மோதி, மற்றொரு பைக் மீதும் மோதியது. இதில் கார்த்திகேயன், மற்றொரு பைக்கில் வந்த மதியழகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர் .இவர்கள் சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கார்த்திகேயன் நேற்று இறந்தார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை நடத்தினார்.இது தொடர்பாக ஸ்கூட்டர் ஓட்டி வந்த அம்சராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.