கோவையில் பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம், அண்ணா நகரை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், நெசவு தொழில் செய்துவருகிறார். இவரது மகன் தன்யா வர்ஷினி ( வயது 17) நெகமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார் .இவர் தீராத வயிற்றுவலி அவதிபட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்து அவரது வீட்டில் சுடிதார் சால்வையை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து இவரது தந்தை மாயகிருஷ்ணன் நெகமம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.