தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 483 கிலோ குட்கா பறிமுதல்- விவசாயி கைது..!

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் ஒரு தோட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சதீஷ், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 453.95 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக ஈச்சனாரி பக்கம் உள்ள மாச்சே கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமார் (வயது 49) கைது செய்யப்பட்டார்.காதர்பாட்சா என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்