பிளஸ் 1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை பீளமேடு எல்லைத் தோட்டம் ரோடு ,ராயப்பர் வீதியை சேர்ந்தவர் பனையடியன் ( வயது 42 ) இவரது மகள் கவிப்பிரியா (வயது 15)கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு சரியாக படிக்க முடியாததால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் சுடிதார் துப்பட்டாவை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை பனையடியன் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.