கோவையில் துணை ராணுவத்தினர் விடிய விடிய வாகன சோதனை.!!

கோவை : நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது .அதற்கு முன்னதாக தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 3 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் 2 – ம் கட்டமாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் கோவைக்கு ரயில் மூலம் வந்தனர். இதில் ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் சேலத்திற்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ள 4 கம்பெனி துணை ராணுவத்தினர் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கோவை மாநகரம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து இரவில் விடிய விடிய தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்..