கடிதம் எழுதி வைத்துவிட்டு குழந்தையுடன் இளம்தாய் திடீர் மாயம்.!!

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் அஜித் குமார். இவரது மனைவி செல்வராணி என்ற மரியம் பாத்திமா ( வயது 20) இவர்களுக்கு முகமத் அயன் (வயது 2) என்ற ஆண் குழந்தை உள்ளது செல்வராணிஅவரது உறவினர் ஒருவருடன் சில நாட்களாக நட்பு வைத்திருந்தாராம்.  இந்த நிலையில் நேற்று இரவு கணவர் தூங்கிய பிறகு அவரது வீட்டில் இருந்து திடீரென்று தனது குழந்தையுடன் மாயமாகிவிட்டார். இதுகுறித்து கணவர அஜித்குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராணி மாயமாவதற்கு முன் அவரது வீட்டில் எழுதி வைத்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதில் “நான் இனி வீட்டுக்கு வர மாட்டேன். என்னையும் குழந்தையும் தேட வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்கள்.