திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் தூக்கிட்டு தற்கொலை..

கோவை புலியகுளம், சவுரிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் துரைசாமி .இவரது மகன் கபிலன் ( வயது 31 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் கபிலன் அவரது பெற்றோர்கள் இறந்ததை நினைத்து மன வருத்தத்தில் இருந்தார். நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது அண்ணன் சக்தி கைலாஷ் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.