கோவையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு புதிய அலுவலக திறப்பு விழா.!!

கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி ) அலுவலகம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் இதுவரை செயல்பட்டு வந்தது,இன்று அந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தரை
தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். குத்துவிளக்கும் ஏற்றி வைத்தார் . விழாவுக்கு வருகை புரிந்த போலீஸ் கமிஷனருக்கு சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர்கள் மகேஸ்வரன், ஆனந்த், சுரேஷ் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.