கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், இவரது மகன் அருண் ( வயது 38) இவர் நேற்று ராமநாதபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த நந்தகுமார் ( வயது 28) என்பவருடன் பைக்கில் கோவை சுங்கம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தார். பைக்கை அருண் ஓட்டினார். சுங்கம் வாலாங்குளம் ரோட்டில் சென்ற போது ரோட்டில் வைத்திருந்த தடுப்பு கம்பியில் பைக் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது .அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அருண் இறந்தார் .நந்தகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply