கோடை விடுமுறை… சென்னையில் இருந்து கோவைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம் – பயணிகள் மகிழ்ச்சி.!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் ,முடிந்து, கோடை விடுமுறையும் விடப்பட்டு உள்ளது. கடுமையான கோடை வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்களில் பலர் குழந்தைகளுடன் வெளியூர் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதும், அவர்களின் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்குவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறை பயணிகள் சந்தோஷமாக கழிப்பதற்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கோடை கால விமான போக்குவரத்து கால அட்டவணை செயல்பட தொடங்கி உள்ளது. இந்நிலையில் கோவைக்கு தினமும் 6 புறப்பாடு, ஆறு வருகை என 12 ஆக இருந்த விமானங்கள் தற்பொழுது 8 புறப்பாடு 8 வருகை என 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன.