பொங்கல் தினத்தில் ஓவர் போதையில் கணவர் தகராறு-மனைவி தற்கொலை..

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஒடைய குளம், விதுன் தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பசாமி கூலி தொழிலாளி.இவரது மனைவி சித்ரா ( வயது 36) இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.இவர் பொங்கல் தினத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.இதனால் மனம் உடைந்து அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.