காட்டு யானை தாக்கி முதியவர் பரிதாப பலி..

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தோலாம்பாளையம் ஊராட்சியில் உள்ள காலனிப் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கன் ( வயது 60 )ராமன் ( வயது 60)இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள வனப் பகுதிக்கு புளியம்பழம் பறிக்கச் சென்றனர் .இதில் ராமன் மரத்தில் ஏறி புளியம்பழத்தை பறிக்க அதனை கீழே இருந்து ரங்கன் பொறுக்கினார்.அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டி யானை திடீரென்று ரங்கனை துரத்தி தாக்கியது. யானை தூக்கி வீசியதில் பலத்த காயம் அடைந்த ரங்கன் அதே இடத்தில் இறந்தார்.ராமன் மரத்தில் ஏறியதால் உயிர் தப்பினார்.இது பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர்மற்றும் காரமடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரங்கனின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.