18 பவுன் நகை பறிகொடுத்ததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை புதூர் சிறுவாணி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 64) அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவரிடம் குடும்ப நண்பரான சபியா என்பவர் 18 பவுன் நகையை இரவல் வாங்கி இருந்தாராம். இந்த நகையை சபீனா திருப்பி கொடுக்கவில்லை. இதில் இருந்து ரவி மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி சாரதா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..