ஆணழகன் போட்டியில் தங்கம் வென்ற கோவை போலீஸ்காரர்கள் – கமிஷனர் பாராட்டு..!

கோவை : தமிழ்நாடு காவல்துறைக்கான 63வது இன்டர் சோனல் விளையாட்டு போட்டி சென்னையில் நடந்தது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆணழகன் (பாடிபில்டிங்) போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 60-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். கோவை மாநகர ஆயுதப் படையில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஆர். சங்கர் (வயது 38) போலீஸ்காரராக வேலை பார்த்து வரும்
ஆர். விவேக் (வயது 25) ஆகியோர் பங்கேற்று சாதனை படைத்து தங்கப்பதக்கம்,நற்சான்றிதழ் பெற்றனர். இவர்களில் முதல் நிலை போலீஸ்காரர் சங்கர் 75 கிலோ ஆணழகன் போட்டியில் முதலிடமும், போலீஸ்காரர் சங்கர் 80 கிலோ ஆணழகன் போட்டியில் முதலிடமும் பெற்றார்கள். சாதனை படைத்த போலீஸ்காரர்கள், சங்கர் ,விவேக் ஆகியோரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பாராட்டினார். ஆயுத படை துணை கமிஷனர் முரளிதரன், உதவி கமிஷனர் சேகர், இன்ஸ்பெக்டர் பிரதாப் சிங் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்..