அரசு பஸ் மோதி மூதாட்டி பலி..!

கோவை. மேட்டுப்பாளையம் ரோடு ஒஸ்மின் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65 )இவர் நேற்று ரத்தினபுரி புது பாலம், சக்தி மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது .இதில் சரஸ்வதி படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வ போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரஞ்சித் (வயது 40) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.