கோவில் குளத்தில் ஆண் பிணம் மீட்பு..

கோவை மாவட்டம்: காரமடை -தோளம் பாளையம் ரோட்டில் அருள்மிகு அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும். அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி லோகநாதன் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.,விசாரணையில் இறந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.இதுகுறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..