கோவையில் மயங்கி விழுந்து வடமாநில கட்டிட தொழிலாளி பலி.!!

பீகாரை சேர்ந்தவர் பச்சன் மண்டல் (வயது 49). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்த வந்தார். சம்பவத்தன்று பச்சன் மண்டல் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணியில் ஒரு கட்டிடத்தில் முதல் தளத்தில் வேலை செய்த கொண்டு இருந்தார்.
அப்போது அவருக்க திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கி 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கால், கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.