கோவையில் விபத்து: தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!!

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் விவேக்குமார் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்த வந்தார். இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.

மலுமிச்சம்பட்டியில் இருந்து செட்டிப்பாளையம் ரோட்டில் சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு வேலி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விவேக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதணை செய்த டாக்டர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை சேர்ந்தவர் மைகல் (55). இவர் சம்பவத்தன்று இரவு ஒண்டிப்புதூர் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.
இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.