சாவிற்கு யாரும் காரணம் இல்லை… வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை-3 மாதத்துக்கு பிறகு வெளியான வீடியோ..!

சூலூரில் மன உளைச்சலில் இறந்து போன இளைஞர் இறந்து போவதற்கு முன்பாக இளைஞர் வெளியிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் முத்துக்குமார் என்பவரது மகன் 31 வயதான ரத்தின சீலன் என்கின்ற சிவா இவருக்கு ஈஸ்வரி என்ற தாயும் பானுப்பிரியா என்ற தங்கையும் உள்ளார்.தங்கைக்கு திருமணம் ஆகிய நிலையில் அப்பா அம்மா இருவருடன் ரத்தினசீலன் (எ)சிவா தென்னம்பாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு தங்கி வருகிறார். மேலும் அருகே உள்ள பிரபல மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரத்தினசீலன்(எ)சிவா பயன்படுத்தி வந்துள்ளார்.

அதில் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த விஜி என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. இந்த பழக்கம் காரணமாக இருவரும் சந்தித்து பேசி வந்திருக்கிறார்கள் விஜியுடன் நெருக்கம் அதிகரிக்கவே இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணம் செய்த பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே இவருக்கு திருமணமாகி இருப்பது சிவாவுக்கு திருமணமான பின்பு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரும் பிரிந்து சென்று உள்ளனர். பின்னர் அவ்வப்போது தொலைபேசியில் இருவரும் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர்.

இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த ரத்தினசீலன்(எ) சிவா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நான் தற்கொலை செய்து போவதாக கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டு விட்டு எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை அழைத்துக் கொண்டு கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் ரத்தினசீலன் (எ)இறந்து போய் உள்ளார்.

இது குறித்து கோவை கமிஷனர் அலுவலகத்தில் சிவாவின் பெற்றோர் புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சூலூர் காவல் நிலையத்திற்கு அந்த மனு விசாரணைக்காக மாற்றப்பட்டு சூலூர் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு பதிவில் தன் மகனின் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்று அந்த புகாரில் பெற்றோர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு ரத்ன சீலன் (எ) சிவா சாவதற்கு முன்பாக பேசிய ஆடியோ மற்றும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது மேலும் தன் சாவிற்கு யாரும் காரணம் இல்லை எனவும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை முடிவு எடுத்து இருப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் வைரலாகி உள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.